சபா பிரதேச உரிமையை கோருவதில் தங்களை சூலு சுல்தான் வாரிசுதாரர்கள் என்று கூறிக்கொண்டு ஒரு தரப்பினர் வழக்கு தொடத்த விவகாரத்தில் அதன் பின்னணியில் உள்ள துரோகிகள் அடையாளம் காட்டப்படுவர் என்று சட்டத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அசாலினா ஓத்மான் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
பிரதேச உரிமை தொடர்பான வழக்கில் அனைத்து மேல்முறையீடுகளும் முடிவடைந்தப் பின்னர் இவ்விவகாரத்தில் பின்னணியில் இருந்த செயல்பட்டவர்கள் மக்களுக்கு அடையாளம் காட்டப்படுவர் என்று அஸலினா குறிப்பிட்டார்.
அந்த துரோகிகள் நாட்டிற்குள் இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். இன்று நாடாளுமன்றத்தில் பக்காத்தான் ஹராப்பானின் செலாயாங் எம்.பி. வில்லியம் சிங்கம் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில் Azalina மேற்கண்டவாறு கூறினார்.
சபாவில் பிரதேச உரிமையை கோருவதில் நாட்டின் இறையாண்மைக்கு சவால் விட்ட நபர்களின் பின்னணியில் இருந்தவர்கள் அடையாளம் காட்டப்பட வேண்டும் என்று வாரிசான் எம்.பி. டத்தோஸ்ரீ ஷாஃபி அப்தால்கோரிக்கை விடுத்தார்.
ஜூலு தொடர்புடைய வழக்குகளில் அனைத்து சட்ட நடவடிக்கைகளும் முடிவடைந்தப் பின்னர் அந்த துரோகிகள் நிச்சயம் அடையாளம் காட்டப்படுவர் என்று அஸாலினா மேலும் விளக்கினார்.