விவேகானந்தா ஆசிரம நிலப்பகுதியை வர்த்தகப் பகுதியாக வகைப்படுத்துவதா? மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு

கோலாலம்பூர் மாநகரில் இந்தியர்களின் பாரம்பரிய வர்த்தகத் தளமான பிரிக்பீல்ட்ஸில் வீற்றிருக்கும் 124 ஆண்டுகள் பழமை வாய்ந்த விவேகானந்தா ஆசிரமம் வீற்றிருகும் நிலப்பகுதியை வர்த்தகப் பகுதியாக வகைப்படுத்த முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரையை மறுபரிசீலனை செய்யும்படி பிரிக்பீல்ட்ஸ் வட்டார மக்கள், கோலாலம்பூர் மாநகர் மன்றத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

2040 ஆம் ஆண்டு கோலாலம்பூர் நடவடிக்கை திட்டத்தின் கீழ் விவேகானந்தா ஆசிரமம் வீற்றிருக்கும் நிலப்பகுதியை மேம்பாட்டுக்கு வழிவிடும் ஒரு வர்த்தகப் பகுதியாக வகைப்படுத்த பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விவேகானந்தா ஆசிரமம் வீற்றிருக்கும் நிலப்பகுதியை காப்பாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அதன் நலன் சார்ந்த தரப்பினருக்கு விளக்கம் அளிக்கும் நிகழ்வு கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் DBKL ஆடிட்டோரியம் மண்டபத்தில் நடைபெற்றது.

விவேகானந்தா ஆசிரம நிலப்பகுதி, இந்தியர்களின் அடையாளமாகவும் பாரம்பரிய சின்னமாகவும் இந்த நாட்டில் நீடிக்க வேண்டும். அதனை வர்த்தக நிலப்பகுதியை வகைப்படுத்தப்படும் திட்டம் உடனடியாக கைவிடப்பட வேண்டும் என்று இந்த விளக்கமளிப்புக்கூட்டத்தில் கோலாலம்பூர் மாநகர் மன்றத்திற்கு பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

WATCH OUR LATEST NEWS