விண்வெளியில் சிக்கிய சுனிதா வில்லியம்ஸ் எலான் மஸ்க்-ன் உதவியை நாடுகிறதா நாசா

இந்தியா, ஜூன் 26-

ஜூன் 22 ஆம் தேதி பூமிக்கு திரும்பியிருக்க வேண்டிய விண்வெளி வீரர்கள், விண்வெளி ஆய்வு மையத்திலேயே தங்கியுள்ள நிலையில் அவர்கள் பூமிக்கு திரும்பும் தேதி இறுதி செய்யப்படவில்லை.

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து திரும்ப முடியாத இரு விண்வெளி வீரர்களை மீட்க ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் உதவியை நாசா கோரலாம் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பட்ச் வில்மாோர் ஆகியோருடன் போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்வெளி வாகனம் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு அண்மையில் சென்றடைந்தது.

9 நாட்கள் விண்வெளி ஆய்வு மையத்தில் பல்வேறு பணிகளில் இருவரும் ஈடுபட்டு விட்டு திரும்ப திட்டமிடப்பட்டது. ஆனால் அவர்கள் சென்ற போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் மீண்டும் பூமிக்கு திரும்ப முடியாத அளவுக்கு வாயுக்கசிவு உள்ளிட்ட தொழில் நுட்பக் கோளாறுகளை சந்தித்து உள்ளது.

பூமிக்கு திரும்ப முடியாமல் இருக்கும் இருவீரர்களை மீட்க ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் என்ற கலத்தின் உதவியை நாடலாம் என அமெரிக்க நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். விண்வெளியில் இருக்கும் இரு வீரர்களையும் ஜூலை முதல் வாரத்துக்குள் பூமிக்கு அழைத்து வர பணிகளை நாசா தீவிரப்படுத்தியுள்ளது.

WATCH OUR LATEST NEWS