பேத்தி பட்டமளிப்பு விழா ; டான் ஸ்ரீ முஹிடினிடம் அனைத்துலக கடப்பிதழ் தற்காலிகமாக ஒப்படைப்பு

கோலாலம்பூர், ஜூலை 03-

பெர்சத்து தலைவர் டான் ஸ்ரீ முகைதீன் யாசின் லண்டனுக்கு பயணம் மேற்கொள்ள செக்யன்ஸ் நீதிமன்றம அனுமதி வழங்கியது.

பேத்தியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துக் கொள்ள வேண்டி, அனைத்துலக கடப்பிதழை பெற அந்த முன்னாள் பிரதமர் செய்த முறையீட்டிற்கு நீதிபதி ஹக்கீம் ரோஜின அயோப் அனுமதியளித்தார்.

அதன்படி அவரது டான் ஸ்ரீ முகைதீன்-னின் கடப்பிதழ் அவரது வழக்கறிஞர் டத்தோ கே. குமரேந்திரன் – னின் தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டது.
அந்த முறையீட்டிற்கு அரசுத் தரப்பு எந்தவோர் எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை.

குற்றஞ்சாட்டப்பட்ட டான் ஸ்ரீ முகைதீன் -னிடம் இன்று வழங்கப்பட்ட அனைத்துலக கடப்பிதழை அடுத்த மாதம் 20-ஆம் தேதி மீட்டுக் கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS