கோலாலம்பூர், ஜூலை 03-
B40 தரப்பினருக்கு கட்டுப்படியாகும் சுகாதார சேவைகளை வழங்குமாறு சிலாங்கூரில் உள்ள இன்னும் ஏராளமான தனியார் கிளினிக்குகள் ஊக்குவிக்கப்படுகின்றன.
அதன் மூலம் தேவையுடைய தரப்பினர் நியாயமான விலையில் தொடர்ந்து சுகாதார சேவையை பெற முடியும் என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வி. பாப்பா-ரைடு தெரிவித்தார்.
மலிவு விலை சுகாதார சேவைகள் B40 தரப்பினரின் சுமையை குறைக்க பெரிதும் துணைப்புரிகின்றன.
இருந்த போதிலும் சில வேளைகளில் அதிக மருத்துவ செலவுகளால் பெரும்பாலான B40 தரப்பினர் சுகாதார சேவைகளை பெறுவதில் சிரமத்தை எதிர்நோக்கியிருப்பதாக வி. பாப்பா-ரைடு குறிப்பிட்டார்.