கோலாலம்பூர், ஜூலை 04-
கோலாலம்பூர் மாநகர் மன்றமும் / கூட்டரசு பிரதேச இலாகாவும் 756 அங்காடி வியாபாரிகளுக்கும் / 434 இல்லத்தரசிகளுக்கும் சமூக பாதுகாப்பு நிறுவனமான சொக்சோ பாதுகப்பு சலுகைக்கான சந்தாவை எற்றுக் கொண்டுள்ளன.
இதனை மனித வள அமைச்சார் ஸ்டீவன் சிம் சீ கியோங் இன்று அறிவித்தார். 756 அங்காடி வியாபாரிகளுக்கு ஏற்படக்கூடிய சொக்சோ சந்தாவிற்கான ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 996 வெள்ளியை கோலாலம்பூர் மாநகர் மன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.
ஒவ்வொரு அங்காடி வியாபாரிக்கும் 232 வெள்ளி 80 காசுவை கோலாலம்பூர் மாநகர் மன்றம்/ சொக்சோவிற்கு செலுத்துகிறது என்று ஸ்டீவன் சிம் தெரிவித்தார்.