ஆடவருக்கு 6 மாத சிறை

கோலாலம்பூர், ஜூலை 04-

முக நூல் வாயிலாக வேலை வாய்ப்பு விளம்பரம் செய்து மாது ஒருவருக்கு சொந்தமான 13 லட்சம் வெள்ளியை மறைத்து வைத்திருந்த குற்றத்திற்காக கட்டுமான நிறுவனம் ஒன்றின் முன்னாள் உரிமையாளர் ஒருவருக்கு கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று 6 மாத சிறைத் தண்டனை விதித்தது.

43 வயது அஸ்வான் சம்சுதீன் என்ற அந்த முன்னாள் உரிமையாளர் தனக்கு எதிரான குற்றத்தை ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து நீதிபதி மொஹமட் டெரில் இத்தண்டனையை விதித்தார். சம்பந்தப்பட்ட நபர் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி கோலாலம்பூர், செந்தூலில் இக்குற்றத்தை புரிர்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது

WATCH OUR LATEST NEWS