ஷா ஆலம் , ஜூலை 04-
வரும் ஜூலை 6 ஆம் தேதி சனிக்கிழமை பினாங்கு, சுங்கை பக்காப் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறாவிருக்கிறது. இந்த இடைத் தேர்தலில் பக்காத்தான் ஹாராப்பான் வேட்பாளர், மலாய்க்கார வாக்காளர்களில் 36 விழுக்காட்டினரின் ஆதரவை பெறுவாரேயானால் அத்தொகுதியை கைப்பற்ற முடியும் என்று இன்சிடியூசி டாருல் எஹ்சான் நிர்வாகத் தலைவர் பேராசிரியர் டத்தோ டாக்டர் முகமது ரெட்ஜுவான் ஓத்மான் ஆருடம் கூறியுள்ளார்.
இந்த இடைத்தேர்தலில் மூன்று வாக்களிப்பு மையங்களிலிருந்து பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் குறைந்த பட்சம் இந்தியர்களின் 20 விழுக்காடு வாக்குகளை பெற்றாக வேண்டும்.
சுங்கை பக்காப் -பில் 20 விழுக்காடு வாக்குகளும், புத்தெரி குனாங்- கில் 26 விழுக்காடு வாக்குகளும் லடாங் செம்பா – வில் 25 விழுக்காடு வாக்குகளும் பெற்றாக வேண்டும் என்று DR முகமது ரெட்ஜுவான் வலியுறுத்தியுள்ளார்.
மலாய்க்காரர்களின் 36 விழுக்காடு வாக்குகளும், இந்தியர்களின் 20 விழுக்காடு வாக்குகளும் பக்காத்தான் ஹாராப்பான் -க்கு கிடைக்குமானால் அக்கூட்டணி வேட்பாளரே இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெறுவார் என்று DR. முகமது ரெட்ஜுவான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.