கோலாலம்பூர், ஜூலை 04-
மேம்பாட்டாளர்கள், கட்டிடக் கலைஞ்ர்கள், மேம்பாட்டுக்கு திட்டமிடுபவர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள், தாங்கள் செயல்படுத்தும் ஒவ்வொரு வளர்ச்சித் திட்டமும் உற்சாகமூட்டும் மதிப்புவாய்ந்த கலாச்சார அம்சங்களைக் கொண்டதாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக்கொண்டுள்ளார்.
எந்தவொரு வளர்ச்சித் திட்டதையும் திட்டமிடும்போது கலாச்சார பாரம்பாரியத்தின் பன்முகத்தன்மை மற்றும் செழுமை ஆகியவற்றை கருத்தில் கொண்டு கட்டுமான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு பிரதமர் கோரிக்கை விடுத்தார்.
ஆரங் அஸ்லி , மலாய்க்காரர்கள், சீனர்கள் மற்றும் இந்தியர்கள் மலேசிய மக்களில் ஒரு பகுதியாக விளங்குகின்றனர். இதேபோன்று சபா, சரவாக்கில் தயாக்/ கடஜான்/ முருட் முதலிய பழங்குடியினர் ஆகியோரின் கலாச்சார்க் கூறுகளை கட்டிடங்களில் பிரதிபலிப்பதாக இருக்கலாம் என்று பிரதமர் பரிந்துரை செய்துள்ளார்.