குழந்தையில் பாலியல் பலாத்காரம், ஆடவர் மீது குற்றச்சாட்டு

கோத்தா பாரு , ஜூலை 04-

11 மாதமே நிரம்பிய பெண் குழந்தையிடம் பாலியல் பலாத்காரம் புரிந்ததாக லோரி ஓட்டுநர் ஒருவர், கிளந்தான், கோத்தா பாரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

32 வயது மொஹமட் ஸுலழர் இப்ராஹிம் என்ற அந்த லோரி ஓட்டுநர் கடந்த ஜுன் 26 ஆம் தேதி, கோத்தா பாரு, பசீர் தும்புத் என்ற இடத்தில் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

2017 ஆம் ஆண்டு சிறார் குற்றவியல் சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட அந்த ஆடவர், தனக்கு எதிரான குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

கூடிய பட்சம் 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க வகைசெய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள அந்த நபருக்கு எதிராக தண்டனை விதிக்கப்படும் வரையில் அவருக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் அனுமதி மறுத்தது.

WATCH OUR LATEST NEWS