கோலாலம்பூர், ஜூலை 04-
பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தங்கள் ஆதரவை தெரிவிந்துள்ள பெர்சத்து கட்சியின் 6 முன்னாள் உறுப்பினர்கள் தங்கள் நாடாளுமன்றத் தொகுதிகள் காலியாகாது என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மடானி அரசாங்கத்திற்கு ஆதரவாக தாங்கள் எடுக்கும் நடவடிக்கைகள் கட்சியின் அரசிலமைப்புச் சட்டத்தை மீறவில்லை என்று பெர்சத்து -வின் 6 நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான லாபுவன் எம்.பி சுஹேலி அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.
6 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பெர்சத்து கட்டசியின் விட்டு விலகவில்லை என்றும் / கட்சிவிட்டு, கட்சி தாவவில்லை என்றும் கட்சியிலிருந்து உறுப்பினர் தகுதியிலிருந்து மட்டுமே தாங்கள் நீக்கப்பட்டதாகவும், அவர்கள் தங்கள் நிலைப்பாட்டில் இன்னமும் உறுதியாக இருக்கின்றனர் என்றும் லாபுவன் எம்.பி சுஹேலி அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.
குலா கங்சர்/ புக்கிட் கந்தங்/ ஜெலி/ லாபுவன் / தஞ்சுங் காரங்/ மற்றும் குவ மூசாங் ஆகிய 6 நாடாளுமன்ற உறுப்பினர்களே தங்கள் நிலைப்பாட்டை அறிவித்துள்ளனர்.