பெட்டாலிங் ஜெயா, ஜூலை 8-
பொது மக்கள் நடமாட்டமிகுந்த பகுதியில் அரச மலேசியப் போலீஸ் படையின் PDRM சின்னம் பொறிக்கப்பட்ட டி சட்டையை அணிந்து கொண்டு நடமாடி வரும் நபர், போலீஸ் அதிகாரி அல்லர் இன்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அந்த நபர் சம்பந்தப்பட்ட வீடியோ காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருவதைத் தொடர்ந்து அந்த நபரை போலீசார் தேடி வருவதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ACP ஷாருல்நிஜாம் ஜாபர் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட நபர், வானங்கள் நிறுத்துவதற்கு தடை செய்யப்பட்ட பகுதிகளில் தனது வாகனத்தை நிறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் PJU 8/8 டமன்சாராவில் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது என்று ஷாருல்நிஜாம் ஜாபர் குறிப்பிட்டார்.