ஷா அலாம், ஜூலை 08-
தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக தொடங்கப்பட்ட மனிதவள அமைச்சின் / மனிதவள மேம்பட்டு கழகமான HRD Corp-பின் பல்வேறு பயிற்சித் திட்டங்களில் தொழிலாளர்களுக்கு சரிசமமான வாய்ப்புகளை வழங்க நிர்வாகங்கள் தவறிவிட்டன என்று NUBE எனப்படும் தேசிய வங்கி ஊழியர்கள் தொழிற்சங்கம் குற்றஞ்சாட்டியாது.
அனைத்து ஊழியர்களுக்கும் சரிசமமான பயிற்சித் திட்டங்களை வழங்க வேண்டிய நிர்வாகங்கள் ஒரவஞ்சனையுடன் செயல்பட்டுள்ளதாக NUBE -இன் பொதுச் .சோலோமன் தெரிவித்துள்ளர்.
HRD.Corp. பினால் வழங்கக்கூடிய பயிற்சித் திட்டங்களுக்கு தொழிலாளர்களை அனுப்ப நிர்வாகங்கள் தயக்கம் காட்டி வந்துள்ளன என்று சோலமன் கூறினார்.
குறிப்பாக வங்ககளில் வேலை செய்வதற்கு போதுமான ஊழியர்கள் இல்லை என்றும், அப்படியே பயிற்சிகள் வழங்கப்பட்டால், சம்பந்தப்பட்ட தொழிலாளர்கள் வேலையைக் கற்றுக்கொண்டு மற்ற நிறுவனங்களுக்கு தாவிவிடுவார் என்ற அச்சத்தின் காரணமாக இதுபோன்ற பயிற்சிகளுக்கு தொழிலாளர்களை அனுப்புவது கிடையாது என்று சோலமன் கூறினார்.
நிர்வாகங்களின் இத்தகைய செயல்கள், HRD Corp. அமைக்கப்பட்ட நோக்கத்திற்கு முரணாகவும், அதன் நோக்கத்தை நிறைவு செய்ய முடியாத நிலையிலும் இருப்பதாக சோலமன் சுட்டிக்காட்டியுள்ளார்.