87 அந்நிய நாட்டவர்கள் கைது

ஜொகூர், ஜூலை 08-

ஜொகூர் மாநிலத்தில், பத்து பஹத் , மெர்சிங் மற்றும் ஜொகூர் பாரு ஆகிய பகுதிகளில் குடிநுழைவுத்துறை மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் 87 அந்நிய நாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் பத்து பஹத் – டில் உள்ள ஓர் உணவகத்தின் உரிமையாளரான 53 வயது நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக குடிநுழைவுத்துறை இயக்குநர் டத்தோ மொஹமட் ருசடி மொஹமட் ட்ருஸ் தெரிவித்துள்ளார்.

இச்சோதனை கடந்த ஜூலை முதல் தேதி தொடங்கி, 3 தினங்களுக்கு நடைபெற்றதாக அவர் குறிப்பிட்டார்.

உணவகங்கள் மற்றும் கடை வீடுகளை இலக்காக கொண்டு நடத்தப்பட்ட இந்த சோதனையில் 183 அந்நிய நாட்டவரிடம் சோதனை நடத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS