ஷா அலாம், ஜூலை 09-
பகடிவதயினால் ஒருவர் தற்கொலை செய்து கொள்வதற்கு தூண்டப்பட்டால் அவரின் மரணத்திற்கு காரணமாக இருந்தவர்கள், குற்றவியல் சட்டம் 305 மற்றும் குற்றவியல் சட்டம் 306 ஆகிய பிரிவின் கீழ் தண்டிக்க முடியும் என்று பிரபல சட்ட வல்லுநர் முகமது ஹனிஃப் காத்றி அப்துல்லா தெரிவித்தார்.
சம்பந்தப்பட்டவர் பிறருக்கு மன உளைச்சல் தந்து, மரணத்தை ஏற்படுத்தும் அளவிற்கு உடந்தையாக இருப்பாரேயானால் குற்றவியல் சட்டங்கள் அவர் மீது பிரயோகிக்க முடியும் என்று ஹனிஃப் காத்றி கூறுகிறார்
ஒருவரின் மரணத்திற்கு இன்னார்தான் காரணம் என்று போதுமான ஆதாரங்களுடன் நிரூபித்தால் சம்பந்தப்பட்டவருக்கு எதிராக போலீஸ் புகார் செய்து நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்ட முடியும் என்று அந்த சட்ட வல்லுநர் கூறுகிறார்.
டிக் டோக் பகடிவதைக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்ட ஈஷா என்ற ராஜேஸ்வரி மரணம் தொடர்பில் 35 வயது பெண் கைது செய்யப்பட்டது தொடர்பில் சம்பந்தப்பட்ட சட்ட வல்லுநர் நடப்புச்சட்டத்தை மேற்கொள்காட்டி பேசினார்.