அமைச்சரவையில் விவாதிக்கப்படும்

கோலாலம்பூர், ஜூலை 09-

டிக் டோக் பகடிவதையினால் உயிரை மாய்த்துக் கொண்ட ஈஷா என்ற ராஜேஸ்வரி மரணம் தொடர்பில் இணையத்தள பகடிவதை குற்றவாளிகளை ஒடுக்குவதற்கு நடப்பு சட்டம் மற்றும் அமலாக்க நடவடிக்கைகளை கடுமையக்குவது குறித்து வரும் வெள்ளிக்கிழமை அமைச்சரவையில் விவாதிக்கப்படவிருக்கிறது

ஈஷாவிற்கு ஏற்பட்ட துயரச் சம்பவத்தைப் போன்று சைபர் குற்றவாளிகளின் செயல்கள், தொடர்வதற்கு வழி ஏற்படுத்தப்படாமல் இதனை ஒரு முடிவுக்கு கொண்டு வருவதற்கு அமைச்சரவைக்கு கொண்டு செல்லப்படவிருப்பதாக தொடர்புத்துறை அமைச்சர் பாட்மி பாசில் தெரிவித்துள்ளார்.

ஈஷா மரணம் தொடர்பில் போலீஸ் துறை கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று அராசங்கம் பேச்சாளரான பாட்மி பாசில் உறுதி அளித்தார்

WATCH OUR LATEST NEWS