தற்போது தென்னிந்தியாவின் உச்ச நடிகைகளில் ஒருவராகவும், அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராகவும் இருக்கும் நடிகை காதல் கிசுகிசுவில் சிக்கினார். மேலும் பிரபல தொழிலதிபருடன் நடைபெற இருந்த நிச்சயதார்த்ததையும் ரத்து செய்தார். யார் அந்த நடிகை என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

நடிகை தற்போது தென்னிந்தியாவின் உச்ச நடிகைகளில் ஒருவராகவும், அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராகவும் இருக்கிறார். 1983-ம் மே 4-ம் தேதி, சென்னையில் தமிழ் பாலக்காடு ஐயர் குடும்பத்தில் பிறந்தவர் த்ரிஷா. 1999 ஆம் ஆண்டு வெளியான ஜோடி படத்தில் சிம்ரனுக்கு தோழியாக நடித்திருந்த த்ரிஷா, பின்னர் மௌனம் பேசியதே படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

மனசெல்லாம், சாமி, எனக்கு 20 உனக்கு 18, கில்லி, ஆயுத எழுத்து, திருப்பாச்சி, ஆறு என பல படங்களில் நடித்தார். இதன் மூலம் குறுகிய காலத்திலேயே விஜய், அஜித், சூர்யா, சிம்பு, கமல், விக்ரம் என அப்போது டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்தார் த்ரிஷா.
இதனிடையே தெலுங்கிலும் பல ஹிட் படங்களில் நடித்த டாலிவுட்டிலும் முன்னணி நடிகையாக மாறினார். தமிழில் அபியும் நானும், விண்ணை தாண்டி வருவாயா, கொடி, 96, பொன்னியின் செல்வன் 1, பொன்னியின் செல்வன் 2 ஆகிய படங்களில் த்ரிஷாவின் நடிப்பு பல தரப்பினராலும் பாராட்டப்பட்டது. நடிகை த்ரிஷா கடைசியாக லியோ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.

த்ரிஷா 2010 இல் அக்ஷய் குமாருக்கு ஜோடியாக கட்டா மீத்தா என்ற பாலிவுட் படத்திலும் நடித்தார். எனினும் இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தது. தற்போது அஜித்தின் விடாமுயற்சி, கமல்ஹாசனின் தக்லைஃப் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளில், 3 பிளாக்பஸ்டர் படங்களில் நடித்தார். மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் 1, 2 படங்களில் குந்தவையாக நடித்து அசத்தி இருப்பார் த்ரிஷா. இந்த. இரண்டு படங்களும் ஒட்டுமொத்தமாக உலகம் முழுவதும் ரூ. 800 கோடிக்கு மேல் வசூல் செய்தது. மேலும் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்த லியோ படம் உலகளவில் ரூ.600 கோடிக்கு மேல் வசூல் செய்தது..
திரை வாழ்க்கையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றிகரமான நடிகையாக வலம் வரும் த்ரிஷா தனது தனிப்பட்ட வாழ்க்கையில் பல சர்ச்சைகளை எதிர்கொண்டர். ஆம்.. பிரபல தெலுங்கு நடிகர் ராணா டகுபதியும் த்ரிஷாவும் பல ஆண்டுகளாக டேட்டிங் செய்வதாக கிசுகிசுக்கப்பட்டது. இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அடிக்கடி வைரலாகி வருகிறது.

த்ரிஷாவும் ராணவும் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் கூறப்பட்டது. இதுகுறித்து ராணாவிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது த்ரிஷாவுடன் டேட்டிங் செய்ததை ஒப்புக்கொண்டார்.. மேலும் “ நாங்கள் நீண்ட காலமாக நண்பர்களாக இருந்தோம், டேட்டிங் செய்தோம். ஆனால் எங்களுக்குள் ஒத்துப்போகவில்லை” என்று கூறினார். எனினும் ராணா மற்றும் த்ரிஷா இருவரும் ஏன் பிரிந்தார்கள் என்பது குறித்து தொடர்ந்து மௌனம் காத்து வருகின்றனர்.

மேலும் த்ரிஷா பிரபல தொழிலதிபர் வருண் மணியன் என்பவரை காதலிப்பதாக கூறிய த்ரிஷா அவரை திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் அறிவித்தார். கடந்த 2015-ம் ஆண்டு த்ரிஷாவுக்கு வருண் மணியனுக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. எனினும் சில மாதங்களில் இருவரும் பிரிந்துவிட்டதாகவும் நிச்சயதார்த்தம் முறிவு என்று அறிவிக்கப்பட்டது

சமீபத்தில் விஜய் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறி அவருடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி ஒன்றையும் த்ரிஷா பதிவிட்டிருந்தார். இதையடுத்து த்ரிஷாவும் விஜய்யும் லிவிங் டூ கெதரில் வாழ்வதாகவும் இருவரும் அடிக்கடி ஒன்றாக வெளியே செல்வதாகவும் பல வதந்திகள் பரவியது. எனினும் மற்றவர்களின் கருத்துகளை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வதந்திகளுக்கு த்ரிஷா மறைமுகமாக பதிலடி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
