சைபர் மிரட்டலைக் கையாள காவல்துறைக்கு சிறப்புச் சட்டம் தேவை – KPN

கோலாலம்பூர்,ஐஊலை 13-

இணைய பகடிவதைகளைத் தடுப்பதற்கான சிறந்த சட்டங்களை தேவைப்படுகின்றது என்று மலேசிய அரச போலீஸ் படையின் தலைவர் Tan Sri Razarudin Husain தெரிவித்துள்ளார்.
தற்போது இந்த இணையப் பகடி வதை வழக்குகளை கையாள பல்வேறு சட்டப் பிரிவுகளை அதாவது குற்றவியல் சட்டம் மற்றும் 1998 ஆம் ஆண்டு தொலைதொடர்பு மற்றும் பல்லூடச் சட்டம் (SKMM) போன்றவைகளைப் பயன்படுத்துவது அவசியமாகியுள்ளது.
“சூழல்களை மிரட்டல் மற்றும் அச்சுறுத்தல் போன்றவைகளை கருத்தில் கொண்டு, போலீசார் குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்துவர், மேலும் அவமானம் மற்றும் அவமதிப்பு பேச்சு சம்பவங்களில், இது 1998 ஆம் ஆண்டு தொலைதொடர்பு மற்றும் பல்லூடச் சட்டம் (SKMM) சட்டத்தின் (SKMM) கீழ் விசாரிக்கப்படும்,” என்று அவர் இன்று கோலாலம்பூரில் தொலையாடல் மூலம் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS