அம்னோ யாருக்கும் அஞ்சவில்லை- சாயிட் பதில்

கோலாலம்பூர்,ஜூலை 13-

நாடாளுமன்றத்தில் பிரதமர் அன்வாருக்கு ஆதரவாக நின்ற முன்னாள் பெர்சத்துக் கட்சியைச் சார்ந்த 6 நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் தகுதி பறிபோனால், மீண்டும் ஒற்றுமை அரசாங்கம் தேர்தலை எதிர்நோக்கி அதில் தோல்விகண்டுவிடும் என்ற பயம் இருக்கின்றது என பெர்சத்து கட்சியின் தலைவர் டான் ஶ்ரீ முகிடின் யாசின் கூறி வரும் கூற்றை அம்னோ கட்சியின் தலைவர் சாயிட் ஹமிடி மறுத்துள்ளார்.

இடைத்தேர்தல்களை எதிர்நோக்க அம்னோ பயந்ததில்லை எனவும், போட்டியை எதிர்கொள் தம் கட்சி எவ்வேளையிலும் தயார் நிலையில்தான் இருக்கின்றது என அவர் கூறினார்.

மேலும், நாடாளுமன்ற சபாநாயகர் டான்ஶ்ரீ ஜோஹாரி அளித்த முடிவு ஏற்றுக் கொள்ள கூடியது என கூறிய சாயின், எதிர்கட்சியினர் சபாநாயகர் எடுத்த முடிவு தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கைக்கு எடுத்து செல்லலாம். அதைவிடுத்து எதிர்கட்சியினர் குறை கூறி கொண்டிருப்பது சரியான போக்கு அல்ல என சாயிட் சுட்டிக் காட்டினர்.

WATCH OUR LATEST NEWS