தோட்டத்திலுள்ள குடிசையில் இருந்து போதைப்பொருள்

பகாங்,ஜூலை 13-


நேர்று பகாங், ஜெரான்டூட், உலு டெம்பலிங்,கம்புங் புக்கிட் மாட் டேலி்ங்ஙில் அமைந்துள்ள ரப்பர் தோட்டத்தில் உள்ள ஒரு குடிலில் நடத்திய சோதனையில் போலீசார் ஒரு துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.


நேற்று காலை 6 மணி அளவில், ஜெரான்டுட் போதைப்பொருள் குற்ற விசாரணை துறையினர் நடத்திய சோதனையில் 6000 ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்களை மீட்டியதுடன் இரு சகோதரர்கள் உள்பட மூன்று ஆடவர்கள் கைது செய்யப்பட்ட்டுள்ளனர்.


கைது செய்யப்பட்ட 23 முதல் 37 வயதுக்கு இடையில் உள்ள சந்தேகநபர்கள், போலீசார் சோதனையில் ஈடுப்பட்டிருந்த போது, அவர்கள் குடிலில் ஓய்வெடுத்து கொண்டிருந்ததாகக் பகாங் மாநில போலீஸ் துணைத் தலைவர் Datuk Noor Hisam Nordin, கூறினார்.
மேலும் ,இந்த வழக்கு ஆபத்தான போதைப்பொருள் சட்டம் 39 பி பிரிவும், துப்பாக்கி சட்டம் (சிறப்பு தண்டனை) 1971 8(ஏ) பிரிவின் தவறான துப்பாக்கி உடமைக்கு உட்பட்டு விசாரணை நடைபெறுவதாகக் அவர் மேலும் கூறினார்.

WATCH OUR LATEST NEWS