மலேசியா ஏர்லைன்ஸ்-சின் MH17 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவு

கோலாலம்பூர், ஜூலை 17-

மலேசியா ஏர்லைன்ஸ் -சுக்கு சொந்தமான MH17 விமானம், கிழக்கு UKRAINE-னில் சுட்டு வீழ்த்தப்பட்டு இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைகின்றது.

கடந்த 2014ஆம் ஆண்டு ஜூலை 17ஆம் தேதி, நிகழ்ந்த அச்சம்பவத்தில், BOEING 777 விமானத்தில் பயணித்திருந்த 283 பயணிகளும் 15 விமான பணியாளர்களும் உயிரிழந்தனர்.

அவர்களில், 43 பேர் மலேசியர்களாவர். எஞ்சியவர்கள், நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களாவர்.

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தில், பலியானவர்களில் ஆக அதிகமாக 198 நெதர்லாந்து பயணிகள் உயிரிழந்துள்ளனர்.

இறந்தவர்கள் அனைவருக்கும் நீதியைப் பெற்று தரும் நோக்கில், சிவில் மற்றும் குற்றவியல் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.

வழக்குகளின் விசாரணைக்காக, மத்திய நெதர்லாந்திலுள்ள GILZE-RIJEN இராணுவ தளத்தில்,விபத்துக்குள்ளான விமானத்திலிருந்து கிடைத்த பாகங்களைக் கொண்டு, மாதிரி விமானம் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

WATCH OUR LATEST NEWS