கோலாலம்பூர், ஜூலை 17-
தேசிய காற்பந்து அணி – HARIMAU MALAYA-வின்பயிற்றுநர் பொறுப்பிலிருந்து விலகியுள்ள கிம் பான் கோன், அவரது விலகல் முடிவுக்கான காரணத்தை வெளியிட வேண்டுமென, ஜொகூர் இடைக்கால சுல்தான் துங்கு மஹ்கோத்தா இஸ்மாயில் வலியுறுத்தியுள்ளார்.
தென்கொரியாவைச் சேர்ந்த பயிற்றுநரான பான் கோன், நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், HARIMAU MALAYA அணியின் பயிற்றுநர் பொறுப்பிலிருந்து தாம் விலகும் முடிவை எடுத்ததற்கான காரணத்தை கூற முடியாது என்றும் கூறினால் ஆபத்து உள்ளது என்றும் கூறியிருந்தார்.
அத்துடன், தமது அம்முடிவுக்கான காரணத்தை, மலேசிய காற்பந்து சங்கம் – FAM-மின் தலைவர் டத்தோ ஹமிடின் முகமது அமின் அறிவார் என பான் கோன் கூறியிருந்த நிலையில்,ஜோகூர் தாருல் தாசிம்- JDT அணியின் உரிமையாளருமான துங்கு மஹ்கோத்தா இஸ்மாயில், அந்த வேண்டுதலை விடுத்தார்.