ரெம்பியா சட்டமன்ற உறுப்பினரின் வருகையால் பெரிக்காதான் நசியனால்-லுக்கு ஆதாயமில்லை

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 17-

அம்னோ-வைச் சேர்ந்த ரெம்பியா சட்டமன்ற உறுப்பினர் முகமது ஜெய்லானி காமிஸ், PAS கட்சியில் இணைந்திருந்தாலும், அடுத்த மலாக்கா சட்டமன்ற தேர்தலில், அம்மாநிலத்தைக் கைப்பற்ற, பெரிக்காதான் நசியனால் கூட்டணிக்கு, அது எவ்வகையிலும் உதவாது.

நடப்பு முதலமைச்சர் ஏபி ரவுஃப் யூசோப்-ப்பின் தலைச்சிறந்த தலைமைத்துவம் காரணமாக, அடுத்த சட்டமன்ற தேர்தலில் தேசிய முன்னணி, மாநில அரசாங்கத்தை தக்க வைத்துக்கொள்ளும் சாத்தியம் உள்ளதாக, மலாயாப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அரசியல் ஆய்வாளர் அவங் அஸ்மான் பாவி தெரிவித்துள்ளார்.

மேலும், பெர்சாத்து கட்சியின் 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிலைநிறுத்தப்பட்டதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துவரும் PAS கட்சி, தற்போது, ஜெய்லானி-யை கட்சியினுள் சேர்த்துக்கொண்டுள்ளது, கட்சி தாவல் விவகாரத்தில், அக்கட்சி கொண்டிருக்கும் இரட்டை நிலைப்பாட்டை காண்பிப்பதாகவும் அவங் அஸ்மான் சாடினார்.

WATCH OUR LATEST NEWS