டுரியான் தோட்டத்தில் மியான்மார் ஆடவர் கொலை

கெடா, ஜூலை 17-

கெடா, கூலிம் ஜுன்ஜங் என்ற இடத்தில் டுரியான் தோட்டத்தில் மியான்மார் நாட்டைச் சேர்ந்த ஆடவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டதாக கூலிம் மாவட்ட தலைமை காவல்துறை அதிகாரி சூப்ரிண்டென்டன் அஜிசுல் கைரி தெரிவித்தார் .

நேற்று காலை 9.00 மணி அளவில் கூலிம் மாவட்ட காவல்துறையினர் இக்கொலை தொடர்பான தகவலை பெற்றதாக அவர் குறிப்பிட்டார்.

அந்த டுரியான் தோட்டத்தின் மலைப் பகுதியில் ஒரு சிறிய குடிசையில் அந்த ஆடவர் இறந்து கிடந்தார். இறந்த நபரும் மேலும் இருவரும் அந்த குடிசையில் வசித்து வந்ததாக நம்பப்படுகிறது.

35 வயதுடைய அந்த நபர், கூர்மையான ஆயுதத்தினால் தாக்கப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படுவதாக அஜிசுல் தெரிவித்தார்.

செய்தி & படம் : ஹேமா எம்.எஸ். மணியம்

WATCH OUR LATEST NEWS