சிலாங்கூரில், ஜூலை 17-
சிலாங்கூரில் பணிபுரியும் தாய்மார்களுக்கு ஆயிரம் வெள்ளி ரொக்கம் வழங்கும் MAMAKERJA திட்டம் 5,000 பெறுநர்களின் இலக்கை எட்டுவதற்கு இன்னும் திறக்கப்பட்டுள்ளது.
மே மாத நிலவரப்படி மொத்தம் 4,042 பணிபுரியும் தாய்மார்கள் குழந்தைப் பராமரிப்புச் செலவுகளை ஈடுசெய்யும் நோக்கில் இந்த உதவியைப் பெற்றுள்ளனர்.
இத்திட்டம், பெண்களை வேலைவாய்ப்புத் துறையில் தொடர்ந்து இருப்பதை ஊக்குவிக்கும் என்று மாநில மகளிர் மேம்பாட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் அன்பால் சாரி கூறினார்.
முன்னதாக, மாமாகெர்ஜா திட்டம் மொத்தம் 6,094 விண்ணப்பங்களைப் பெற்றது. அதில் மொத்தம் 4,042 பேர் வெற்றிகரமாகப் பண உதவியைப் பெற்றதாக அவர் குறிப்பிடடார்.