கோலாலம்பூர், ஜூலை 17-
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் Aero train ரயில் சேவை வரும் 2025 ஆம் ஆண்டு முதலாவது காலாண்டில் தொடங்கும் என்று போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.
கே.எல்.ஐ.ஏ. முதலாம் முனையத்தில் உள்ள Aero train – களை மாற்றும் பணி வரும் 2025 ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி முற்றுப்பெற திட்டமிடப்பட்டுள்ளதாக அது தெரிவித்தது.
Aero train – களை மாற்றும் பணி நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் முற்றுப் பெறுவதை உறுதி செய்யும் கடப்பாட்டை போக்குவரத்து அமைச்சும் மலேசியா ஏர்போர்ட்ஸ் பெர்ஹாட் நிறுவனமும் கொண்டுள்ளன என்று நாடாளுன்ற அகப்பக்கத்தில் வெளியிட்ட பதிலில் போக்குவரத்து அமைச்சு குறிப்பிட்டது.