ஆடவர் எரியூட்டப்பட்டது, நால்வர் கைது

காஜாங், ஜூலை 19-

ஏழு ஆயிரம் வெள்ளி கடனுக்காக ஆடவர் ஒருவர் எரியூட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் காஜாங் போலீசார் நான்கு ஆடவர்களை கைது செய்துள்ளனர்.

கடந்த ஜுன் 23 ஆம் தேதி காஜாங், செமென்யிஹ் நீர் அணைக்கட்டிற்கு அருகில் உள்ள புதரில் ஆடவர் ஒரவரின் எரியூட்டப்பட்ட சடலம் கண்டு பிடிக்கப்பட்டது.

இது குறித்து போலீசார் மேற்கொண்ட புலன் விசாரணையில் கடன் தொடர்பில் இந்த கொலை நிகழ்ந்துள்ளது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நஸ்ரோன் அப்துல் யூசுப் தெரிவித்தார்.

புலன் விசாரணைக்கு உதவும் வகையில் கடந்த வாரம் வியாழக்கிழமை ஹுலு லங்காட், பத்து 14பகுதியில் 18 க்கும் 44 க்கும் இடைப்பட்ட வயதுடைய நான்கு ஆடவர்களை போலீசார் கைது செய்து இருப்பதாக அவர் மேலும் கூறினார்.

WATCH OUR LATEST NEWS