கோலா திரங்கானு , ஜூலை 18-
மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது பொது மக்களை நோக்கி விளையாட்டுத் துப்பாக்கியால் அச்சுறுத்தியதாக கூறப்படும் ஆடவர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோலத்திரெங்கானு, ஜாலான் சுல்தான் மஹ்மூத், கம்போங் லாடாங் செஹாட் என்ற இடத்தில் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் சபா, ரனாவ்-வைச் சேர்ந்த 26 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார்.
அந்த ஆடவர், பொது மக்களை அச்சுறுத்தும் காட்சியைக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாக பதிவேற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்ததாக கோலத்திரெங்கானு மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அஸ்லி முகமது நூர் தெரிவித்தார்.