நாய்களுக்கு விஷம் வழங்கிய நபரை அடையாளம் காட்டினால் 10 ஆயிரம் வெள்ளி வெகுமதி

பினாங்கு, ஜூலை 19-

பினாங்கு, ஜார்ஜ் டவுன், தஞ்சங் புங்கா-வில், கடந்த சில வாரங்களாக, விஷம் வழங்கப்பட்ட 20க்கும் மேற்பட்ட நாய்கள் கொல்லப்பட்ட சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

அதற்கு காரணமானவர்களை அடையாளம் காட்டுபவர்களுக்கு, 10 ஆயிரம் வெள்ளி வெகுமதி வழங்கப்படும் என பெயர் கூற விரும்பாத நன்கொடையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதன் வழி, நாய்களுக்கு விஷம் வைத்த குற்றவாளிகளை கைது செய்து, நீதிமன்றத்தின் முன் நிறுத்த முடியும் என்றாரவர்.

இதனிடையே, விஷம் வைத்து கொள்ளப்பட்ட நாய்களுக்காக, நேற்று தஞ்சங் புங்கா-வில் நடத்தப்பட்ட அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில், அப்பகுதிவாழ் குடியிருப்பாளர்கள் கலந்துக்கொண்டனர்.

WATCH OUR LATEST NEWS