தேசிய முன்னணியுடனான 72 ஆண்டுகால உறவை MCA கட்சிமுறித்துக்கொள்ளவுள்ளதாக தகவல்

கோலாலம்பூர், ஜூலை 19 –

தேசிய முன்னணியில் 72 ஆண்டுகாலமாக உறுப்புக் கட்சியாக இருந்துவரும் MCA, கூடியவிரைவில் அக்கூட்டணியிலிருந்து விலகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேசிய முன்னணியின் தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மத் ஜாஹித் ஹமிடி-யின் தலைமைத்துவம் மீது, அதிருப்தியைக் கொண்டுள்ள MCA-வின் கடைநிலை உறுப்பினர்கள், அக்கூட்டணியிலிருந்து விலகும்படி, MCA-வின் தலைமைத்துவத்திற்கு அழுத்தங்களை வழங்கி வருவதாக கூறப்படுகின்றது.

நடப்பு ஒற்றுமை அரசாங்கத்தில், பக்காத்தான் ஹாராப்பான்-னுக்கும் தேசிய முன்னணிக்கும் இடையில் ஏற்பட்டுள்ள ஒத்துழைப்பு, நாட்டின் 16ஆவது பொதுத்தேர்தலுக்கு பின்னரும் தொடரும் என ஜாஹித் கூறியிருந்ததே, அம்முடிவுக்கு காரணம் என கூறப்படுகின்றது.

WATCH OUR LATEST NEWS