உலகளாவிய தகவல்நுட்ப செயலிழப்பு, பல விமான நிலையங்களை பாதித்துள்ளன

கோலாலம்பூர்,ஜூலை 20-

உலகளாவிய தகவல்நுட்ப செயலிழப்பினால் மலேசியாவிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இலக்கவியல் அமைச்சு புகார் பெற்று இருக்கிறது என்று அதன் அமைச்சர் Gobind Singh Deo தெரிவித்தார்.

பெரியளவில் ஏற்பட்டுள்ள இந்த தகவல் தொழில்நுட்ப செயலிழப்பு தற்போது சீர்படுத்தப்பட்டு வருகிறது. நடப்புப் பிரச்னை தற்போது அணுக்கமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

IT outage எனப்படும் தகவல் தொழில்நுட்ப செயலிழப்பு காரணமாக உலகமெங்கும் விமானப் போக்குவரத்து பெரும் பாதிப்பைச் சந்தித்தித்து வருகிறது. வங்கி மற்றும் மருத்துவம் உள்ளிட்ட சேவைகளும் இதனால் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளன.

இந்நிலையில் மலேசியாவில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப செயலிழப்புக்கு விரைந்து தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் துரிதமாக எடுக்கப்பட்டு வருவதாக Gobind Singh Deo உறுதி அளித்தார்.

WATCH OUR LATEST NEWS