கடத்தப்பட்ட இரண்டு சிறுமிகள் பாதுகாப்பாக மீட்பு

கோலசிலாங்கூர்,ஜூலை 20-

கோலசிலாங்கூர், Jeram பகுதியில் ஆடவரினால் கடத்தப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படும் இரண்டு சிறுமிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

அந்த சிறுமிகள் கடத்தப்பட்டதாக நேற்று மாலை 6.30 மணிக்கு கிடைக்கப்பெற்ற தகவலைத் தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட துரித தேடுதல் நடவடிக்கையில் சுமார் ஒரு மணித்தில் இந்த இரண்டு சிறுமிகளும் எவ்வித காயமின்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக கோலசிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் Mohd Amban Nordin தெரிவித்தார்.

நேற்று மாலையில் தங்கள் வீடமைப்புப்பகுதியில் அந்த இரண்டு சிறுமிகள் விளையாடிக்கொண்டு இருந்த போது, அடையாளம் தெரியாத நபரால் அவர்கள் கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

போலீசாரின் தேடுதலின் போது அந்த சிறுமிகள் அந்த வீடமைப்புப்பகுதியின் அருகில் கண்டு பிடிக்கப்பட்டனர். சிறுமிகளை கடத்தியதாக நம்பப்படும் ஆடவரை போலீசார் தேடி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

பெற்றோர்களின் கண்காணிப்பின்றி சிறார்கள் வெளியே செல்ல அனுமதிக்க வேண்டாம் என்று Amban Nordin வட்டார மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

WATCH OUR LATEST NEWS