செப்பாங்,ஜூலை 20-
தனது நண்பர்களுடன் ஆற்றில் உல்லாசமாக குளித்துக்கொண்டு இருந்த போது நீரில் மூழ்கிய பதின்ம வயதுடைய இளைஞரின் உடல் கண்டு பிடிக்கப்பட்டது.
நேற்று வெள்ளிக்கிழமை மாலை 4.40 மணியளவில் செப்பாங், Pulau Menanti –யில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் பொது மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலைத் தொடர்ந்து தீயணைப்பு, மீட்புப்படையினர் தேடுதல் நடவடிக்கையை முடுக்கியதாக சிலாங்கூர் மாநில உதவி இயக்குநர் Ahmad Mukhlis Mukhtar தெரிவித்தார்.
சைபர் ஜெயாவைச் சேர்ந்த தீயணைப்பு, மீட்பு நிலையத்தைத் சேர்ந்த 16 வீர்ர்கள் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் 14 வயதுடைய அந்த இளைஞரின் உடல் கண்டு பிடிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.