கோலாலம்பூர்,ஜூலை 20-
மலேசியாவின் 17 ஆவது மாமன்னராக இன்று அரியணை அமர்ந்த சுல்தான் இப்ராஹிமிற்கு பிரிட்டிஷ் மன்னர் Charles தமது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.
மலேசியாவிற்கும் பிரிட்டனுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தவும், /நெருக்கத்தையும் ஒத்துழைப்பையும் / மேம்படுத்திக்கொள்ளவும் மலேசியாவின் புதிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் இணைந்து பணியாற்ற தாம் ஆவலாக இருப்பதாக பிரிட்டிஷ் மன்னர் Charles தமது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
காமன்வெல்த் கூட்டமைப்பில் ஓர் உறுப்பு நாடாக இடம் பெற்றுள்ள மலேசியா, / கல்வி, வர்த்தகம், தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு போன்ற பல்வேறு துறைகளிலும் ஒரு நீண்ட காலமாகவே பிரிட்டனுடன் அணுக்கமான ஒத்துழைப்பை கொண்டுள்ளது என்று மன்னர் Charls குறிப்பிட்டுள்ளார்.
புதிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் தலைமையிலான மலேசியாவுடன் பிரிட்டனின் அந்த ஒத்துழைப்பு தொடரும் என்று மன்னர் Charls அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தியை கோலாலம்பூரில் உள்ள பிரிட்டிஷ் தூதரகம் வெளியிட்டுள்ளது.