பினாங்கு,ஜூலை 20-
சுற்றுலா பேருந்து ஓட்டுநர்களுக்கு எதிராக தேசிய போதைப்பொருள் ஏஜென்சி மேற்கொண்ட சோதனையில் போதைப்பொருள் உட்கொண்டிருந்த சுற்றுலா பேருந்து ஓட்டுநரை கைது செய்துள்ளனர்.
இன்று சனிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் அலோர் ஸ்டார், Plaza Tol Hutan kampong- டோல் சாவடி அருகில் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணை சோதனை நடவடிக்கையில் ல் அந்த சுற்றுலா பேருந்து ஓட்டநர் போதைப்பொருள் உட்கொண்டு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
பினாங்கை சேர்ந்த 46 வயதுடைய அந்த ஓட்டுநரிடம் நடத்தப்பட்ட சிறுநீர் பரிசோதனையில் இது தெரியவந்துள்ளதாக அந்த ஏஜென்சி தெரிவித்தது.