பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடரின் தொடக்க விழா இன்று 26 ஆம் தேதி இரவு 11 மணிக்கு தொடங்குகிறது.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 33ஆவது ஒலிம்பிக் தொடரானது இன்று 26ஆம் தேதி தொடங்கி வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. இதில் உலகம் முழுவதிலிமிருந்து பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 10,714 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில் மாற்று வீரர்கள் உள்பட மொத்தமாக 117 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் இடம் பெற்று விளையாடுகின்றன. இதில், 16 விளையாட்டுகளில் 69 பிரிவுகளில் 329 போட்டிகள் நடைபெறுகின்றன. இந்திய வீரர்கள் 95 பதக்கங்களுக்காக போட்டி போடுகின்றனர்.