முக்கிய தூணை அரசாங்கம் இழக்கிறது

புத்ராஜெயா,ஆகஸ்ட் 05-

ஒப்பந்த முறையில் சேவைக் காலம் நீடிக்கப்பட்ட அரசாங்க தலைமைச் செயலாளர் டான் ஸ்ரீ சுகி அலி வரும் சனிக்கிழமையுடன் பணி ஒய்வு பெறுகிறார் . அவரின் பணி ஒய்வு , அரசாங்கம் ,ஒரு முக்கிய தூணை இழனக்கிறது என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வர்ணித்துவுள்ளார்.

இன்று புத்ரா ஜெயாவில் பிரதமர் துறையின் பணியாளர்களுடன் மாதாந்திர பேரணிக்கு தலைமையெற்று உரையாற்றுகையில் டத்தோ ஸ்ரீ அன்வார் மேற்கண்டவாறு கூறினார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு நாட்டின் பிரதமராக தாம் பொறுப்பெற்றது முதல் அரசாங்க தலைமைச் செயலாளராக இருந்து வரும் டான் ஸ்ரீ சுகி அலி-யின் பங்காளிப்பு அளப்பரியதாகும் . பணி ஒய்வுக்கு பிறகு அவருக்கு முக்கியப் பொறுப்பு ஒன்று காத்திருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்

டான் ஸ்ரீ சுகி அலி -க்கு பதிலாக விரைவில் ஒருவர் , அந்த பொருப்புக்கு நியமிக்கப்படுவார் எனறு பிரதமர் குறிப்பிட்டார்

WATCH OUR LATEST NEWS