லோரியுடன் கார் மோதல் இருவர் பலி

ஈப்போ , ஆகஸ்ட் 05-

தாங்கள் பயணித்த கார் , லோரியுடன் மோதி, விபத்துக்குள்ளானதில் இருவர் உயிர் இழந்தனர் . இச்சம்பவம் , பேராக் , கோபெங், குணங் பஞ்சாங்கங் தேசிய ப்பள்ளிக்கு அருகில் நேற்றிரவு 9.45 மணியளவில் நிகழ்ந்தது .

Perodua Kancil காரில் பயணம்  செய்த 58 மற்றும் 62 வயதுடைய  இருவர்  சிக்கி  சம்பவம்  நிகழ்ந்த இடத்திலேயே  மாண்டனர் .

இந்த விபத்து குறித்து  இரவு 9.48  மணியளவில்  தாங்கள் அவசர  அழைப்பை பெற்றதாக  பேரா மாநில தீயணைப்பு  மீட்புப்படை  உதவி  இயக்குனர்  சபாரோடசி னோர்  தெரிவித்தார் . 

இடுபாடுகளுக்கு  இடையிலிருந்து  இருவரின்  உடல்களையும்  மீட்பதற்கு  பிரத்தியேக  சாதனங்களை  வீரர்கள்  பயன்படுத்தியதாக  அவர்  குறிப்பிட்டார்

WATCH OUR LATEST NEWS