ஈப்போ , ஆகஸ்ட் 05-
தாங்கள் பயணித்த கார் , லோரியுடன் மோதி, விபத்துக்குள்ளானதில் இருவர் உயிர் இழந்தனர் . இச்சம்பவம் , பேராக் , கோபெங், குணங் பஞ்சாங்கங் தேசிய ப்பள்ளிக்கு அருகில் நேற்றிரவு 9.45 மணியளவில் நிகழ்ந்தது .
Perodua Kancil காரில் பயணம் செய்த 58 மற்றும் 62 வயதுடைய இருவர் சிக்கி சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே மாண்டனர் .
இந்த விபத்து குறித்து இரவு 9.48 மணியளவில் தாங்கள் அவசர அழைப்பை பெற்றதாக பேரா மாநில தீயணைப்பு மீட்புப்படை உதவி இயக்குனர் சபாரோடசி னோர் தெரிவித்தார் .
இடுபாடுகளுக்கு இடையிலிருந்து இருவரின் உடல்களையும் மீட்பதற்கு பிரத்தியேக சாதனங்களை வீரர்கள் பயன்படுத்தியதாக அவர் குறிப்பிட்டார்