விடுப்பில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்

கோம்பாக்,ஆகஸ்ட் 06-

மோசடி குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள மலேசிய கடல்சார் இலாகாவின் தலைமை இயக்குநர் கப்டன் முகமது ஹலீம் அகமது, நீதிமன்ற விசாரணைக்கு வழிவிடும் வகையில் விடுப்பில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

கப்டன் முகமது ஹலீம் – மிற்கு எதிரான நீதிமன்ற விசாரணை முடியும் வரையில் அவர், தமது அதிகாரத்துவப் பணிக்கு திரும்பமாட்டார் என்று அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, போக்குவரத்து அமைச்சரின் அங்கீகாரமின்றி மலேசிய கடற்பகுதியில் கனரக கிரேட் தன்மையிலான எண்ணெய்யை ஏற்றி வரும் கப்பல் நிறுவனத்திற்கு சிறப்பு விலக்களிப்பு வழங்கும் கடிதத்தை கப்டன் முகமது ஹலீம் வழங்கியுள்ளார்.

இதன் மூலம் மலேசிய கடல்சார் இலாகாவிற்கு தலைமையேற்றுள்ள போக்குவரத்து அமைச்சை கப்டன் முகமது ஹலீம் திட்டமிட்டு ஏமாற்றியுள்ளதாக குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

WATCH OUR LATEST NEWS