புத்ராஜெயா,ஆகஸ்ட் 06-
மலேசிய அரசாங்கம் தனக்கென்று சொந்தமாக சமூக ஊடகத் தளத்தை நிறுவுவதற்கு நோக்கம் கொண்டிருக்கவில்லை என்று தொடர்புத்துறை அமைச்சர்த ஃபஹ்மி ஃபாட்சில் தெரிவித்துள்ளார்.
மலேசிய அரசாங்கத்திற்கு அது ஓர் அவசரத் தேவையாகவும் இல்லை. காரணம், சொந்தமான சமூக ஊடகத் தளத்தை அரசாங்கம் திறக்குமானால் அதற்கு மிகப்பெரிய செலவு ஏற்படலாம் என்று அமைச்சர் விளக்கினார்.