பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடரில் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற அர்ஷத் நதீமிற்கு அவரது மாமனார் எருமை மாடு ஒன்றை பரிசாக வழங்கிய சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது.

பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடரில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியா சார்பில் போட்டியிட்ட நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றார். ஆனால் மற்றொரு வீரர் கிஷோர் ஜெனா இறுதிப் போட்டி வாய்ப்பை இழந்து வெளியேறினார். பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 92.97மீ தூரம் எறிந்து 90மீ தூரம் எறிந்தவர்களுக்கான பட்டியலில் 6ஆவது இடம் பிடித்தார். அதோடு, தடகளப் போட்டியில் தனது நாட்டிற்காக தங்கம் வென்று கொடுத்த வீரர் என்ற சாதனையையும் நிகழ்த்தினார்.