பாரிஸ், ஆகஸ்ட் 13-
பாரிஸ் ஒலிம்பிக் 2024இல் பெண்களுக்கான ஃப்ரீஸ்டைல் மல்யுத்தத்தில் 50 கிலோ பிரிவில், இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருந்த இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட் 100 கிராம் அதிக எடை காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அவருக்கு எந்தப் பதக்கமும் வழங்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டது. இதனை எதிர்த்து விளையாட்டுக்கான நடுவர் மன்றத்தில் வினேஷ் போகாட் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கின் மீதான தீர்ப்பு நாளை வெளியாகும் (ஆகஸ்ட் 13).
கடந்த வாரம், அமெரிக்க ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான ஜோர்டான் சிலிஸ், ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். ஆனால், ருமேனிய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை அனா பார்போசு செய்த மேல்முறையீட்டில் சிலிஸின் வெண்கலப் பதக்கம் பறிக்கப்பட்டு பார்போசுக்கு வழங்கப்பட வேண்டுமென சனிக்கிழமையன்று அறிவிக்கப்பட்டது.
இந்த வழக்கின் தீர்ப்பின் தாக்கம் வினேஷ் போகாட் வழக்கிலும் எதிரொலிக்குமா என்று எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடையே எழுந்துள்ளது. ஜிம்னாஸ்டிக் வீராங்கனை சிலிஸ் தொடர்பான வழக்கின் முழு விவரம் என்ன?