சிலாங்கூர் ஆட்சிக்குழு சீரமைக்கப்படாது

பெட்டாலிங் ஜெயா , ஆகஸ்ட் 13-

சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழுவை சீரமைக்கும் திட்டம் எதனையும் தாம் கொண்டிருக்கவில்லை என்று மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.

சில முன்னேற்றங்கள் தேவைப்பட்டாலும் தற்போதைய ஆட்சிக்குழுவினர் சிறப்பாக செயல்படுகின்றனர் என்று அமிருடின் ஷாரி குறிப்பிட்டார்.

அனைத்து ஆட்சிக்குழு உறுப்பினர்களும் தங்களின் இலாகாக்களுக்கு ஏற்ப மக்களுக்கான சேவையை மேலும் செம்மைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று மந்திரி பெசார் வலியுறுத்தினார்..

இன்று ஷா ஆலாமில் டெவான் ராஜா மூட மூசா-வில் 2024 ஆம் ஆண்டுக்கான சிலாங்கூர் மாநில மக்களின் டியூஷன் திட்டத்தை தொடக்கிவைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இதனை குறிப்பிட்டார்.

சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழுவில் சீரமைப்பு நடைபெறவிருப்பதாக ஆருடம் தன்மையில் செய்தி வெளிவந்திருப்பது நல்லதுதான். அப்போதுதான் நடப்பு ஆட்சிக்குழு உறுப்பினர்கள் மேலும் சிறப்பாக செயல்படுவதற்கு ஓர் உந்தும் சக்தியாக இருக்கும் என்று அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS