பிரபல பாலிவுட் நடிகர் தனது மனைவியின் தாய்ப்பாலை திருடி குடித்ததாக அவரது மனைவி எழுதிய புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆயுஷ்மான் குர்ரானா என்பதும் இவர் ’விக்கி டோனார்’ என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆகி அதன் பிறகு பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த 2008 ஆம் ஆண்டு தனது சிறு வயது தோழி தாஹிரா என்பவரை ஆயுஷ்மான் திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் ஆயூஸ்மான் மனைவி தாஹிரா ஒரு எழுத்தாளர் என்ற நிலையில் சமீபத்தில் அவர் ஒரு புத்தகத்தை வெளியிட்டுள்ளார். அந்த புத்தகத்தில் தனது கணவர் ஆயுஷ்மான் தனது தாய்ப்பாலை திருடி புரோட்டீன்களுக்காக பயன்படுத்துவதாக கூறியிருந்தார். அதன் பிறகு தனது கணவரிடம் இருந்து தாய்ப்பாலை மறைப்பதற்காக ஒளித்து வைத்துள்ளேன் என்றும் அவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து ஆயுஷ்மான் இடம் கேள்வி கேட்டபோது ’என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி பொதுவெளியில் பேசுவது எனக்கு பிடிக்காது என்றும் இது போன்ற கேள்விகள் வேண்டாம் என்றும் அவர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.