பெட்டாலிங் ஜெயா,செப்டம்பர் 26-
முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது, அவரின் இரண்டு மகன்கள் மற்றும் மகாதீரின் நீண்ட கால நம்பிக்கைக்குரிய நண்பர் துன் டைம் ஜைனுதீன் ஆகியோரிடம் விசாரணை நடத்தும்படி மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM- மிற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவிட்டதாக கூறப்படுவதை பிரதமர் அலுவலகம் இன்று வன்மையாக மறுத்துள்ளது.
அதேவேளையில் Bloomberg- தகவல்படி, பிரதமர் அன்வாரின் முன்னாள் அரசியல் செயலாளர் ஃபர்ஹாஷ் வஃபா சால்வடார் – / பங்குகள் வாங்கியது தொடர்பில் அவரிடம் விசாரணை நடத்த வேண்டாம் என்று SPRM தலைமை ஆணையர் டான் ஸ்ரீ ஆசம் பாக்கி – க்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் உத்தரவிட்டதாக கூறப்படுவதையும் பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் நாட்டின் பிரதமராக பொறுப்பேற்ற இந்த இரண்டு ஆண்டு காலக்கட்டத்தில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் புலன் விசாரணையில் தலையிட்டதோ அல்லது உத்தரவிட்டதோ கிடையாது என்று பிரதமர் அலுவலகம் தெளிவுப்படுத்தியுள்ளது.