கிள்ளான்,செப்டம்பர் 26-
கிள்ளான், கபார், ஜாலான் புக்கிட் கபார் -ரில் மின்னில் பொருட்கள் கிடங்கு ஒன்று தீயில் அழிந்தது. இத் தீ சம்பவம் தொடர்பில் இன்று அதிகாலை 4.40 மணியளவில் தீயணைப்பு, மீட்புப்படையினர் அவசர அழைப்பைப் பெற்றதாக சிலாங்கூர் மாநில உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் மொக்தார் தெரிவித்தார்.
கிள்ளான், Andalas மற்றும் ஷா ஆலாம் புக்கிட் ஜெலூடோங் ஆகிய தீயணைப்பு நிலையங்களின் ஒத்துழைப்புடன் காபார் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இத்தீ விபத்தில் அந்த கிடங்கில் குவிக்கப்பட்டு இருந்த மின்னியல் பொருட்கள் மற்றும் பயன்படுத்தப்பட்டபேட்டரி– கள் அழிந்ததாக பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளது.
தீ ஏற்பட்டதற்கான காரணங்கள் ஆராயப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
