கிள்ளான்,செப்டம்பர் 26-
தற்போது பெய்து வரும் கனத்த மழையைத் தொடர்ந்து வெள்ளத்தை எதிர்கொள்வதற்கு சிலாங்கூர் மாநிலம் தயாராகி வருவதாக அதன் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு, மழை காலம் தொடங்கியதைத் தொடர்ந்து வெள்ளத்தை எதிர்கொள்வதற்கு பேரிடர் பிரிவு, ஊராட்சி மன்றங்கள் ஆகியவை தேவையான அனைத்து முன் ஏற்பாடுகளையும் செய்து வருவதை சிலாங்கூர் மாநில அரசு உறுதி செய்யும் என்று மந்திரி பெசார் குறிப்பிட்டார்.
இதற்கு முன்பு நிகழ்ந்து இருப்பதைப் போன்று மழையளவு விகிதம் கூடிய பட்சமாக இல்லாத பட்சத்தில் வடிக்கால் நீரோட்டம் மேம்படுத்தப்படுவது முறைப்படுத்தப்படும் என்று அமிருடின் ஷாரி தெரிவித்தார்.