தொழிலாளிக்கு தூக்குத் தண்டனை நிலைநிறுத்தம்

புத்ராஜெயா,செப்டம்பர் 26-

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு மூன்று உடன்பிறப்புகளை வெட்டிக்கொன்ற குற்றத்திற்காக உடல் உழைப்புத் தொழிலாளர் ஒருவருக்கு விதிக்கப்பட்ட மரணத் தண்டனையை கூட்டரசு நீதிமன்றம் இன்று நிலைநிறுத்தியது.

தனக்கு எதிரான தண்டனையை குறைக்கும்படி ஷாருல் பித்ரி ஜூசோ என்ற அந்த ஆடவர் செய்து கொண்ட மேல்முறையீட்டு விண்ணப்பத்தை மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவினருக்கு தலைமையேற்ற சபா, சரவா தலைமை நீதிபதி அப்துல் ரஹ்மான் செபில் தள்ளுபடி செய்தார்.

41 வயதுடைய அந்த நபர், கடந்த 2018 ஆம் ஆண்டு மே 17 ஆம் தேதி பிற்பகல் 2.30 மணியளவில் பேரா, தெலுக் இந்தான், கம்போங் சுங்கை ஹாஜி முஹம்மது செலிகோ என்ற இடத்தில் ஒரு வீட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 வயது, 3 வயது மற்றும் 2 வயதுடைய மூன்று உடன்பிறப்புகளை கொன்றதாக குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தார்.

WATCH OUR LATEST NEWS