ஆடவரை சுட்டுக்கொன்றது மூலம் கடத்தப்பட்ட நபர் மீட்பு

ரவாங்,செப்டம்பர் 26-

26 குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக கூறப்படும் ஆடவர் ஒருவர், நேற்று அதிகாலையில் ரவாங், கம்போங் பாரு குண்டாங்-கில் சுட்டுக்கொல்லப்பட்டது மூலம் அந்த நபர் உட்பட அவரின் இரண்டு நண்பர்களால் கடத்திச் செல்லப்பட்ட ஓர் அந்நிய ஆடவரை போலீசார் பாதுகாப்பாக மீட்டுள்ளனர் என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ உசேன் உமர் கான் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட பேர்வழிகளால் 45 வயதுடைய ஓர் இந்தோனேசியர், செராஸ், சலாக் தெற்கு பகுதியில் கடத்தப்பட்டுள்ளார். அந்த இந்தோனேசியர் கடத்தப்பட்டதாக கிடைக்கப்பெற்ற தகவலைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட கடத்தல்காரர்களின் வாகனத்தை நோக்கி போலீசார் பின் தொடர்ந்து சென்றதாக டத்தோ உசேன் உமர் கான் விளக்கினார்.

அப்போது நடந்த துப்பாக்கிச் சண்டையில் அந்த நபர் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

போலீசாரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ள அந்த இந்தோனேசியர், இது குறித்து செராஸ் மாவட்ட போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளதாக அவர் தெரி வித்தார்.

சுட்டுக்கொல்லப்பட்ட 37 வயது நபர், காஜாங்கை பூர்வீகமாக கொண்டவர். அவர் ரவாங் அருகில் சுங்கை சோ – வில் (சுங்கை சோவில் ) வசித்து வந்ததாக நம்பப்படுகிறது.

WATCH OUR LATEST NEWS