கோலாலம்பூர், செப்டம்பர் 26-
தேசிய பதிவு இலாகாவான JPN, மக்களுக்கு தலா 700 வெள்ளி உதவித் தொகையை வழங்கி வருவதாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் தகவலை அவ்விலாகா மறுத்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் அந்த தகவலை பொது மக்கள் நம்ப வேண்டாம் என்றும், அது பொய்யானது என்றும் JPN இன்று விளக்கம் அளித்துள்ளது.
பொது மக்களுக்கு அரசாங்கத்தின் எந்தவொரு நிதி உதவி வழங்கப்படுவதாக இருந்தாலும், அதன் உண்மைத் தன்மையை கண்டறிவதற்கு STR எனப்படும் Sumbangan Tunai Rahmah அகப்பக்கத்தை வலம் வருமாறு JPN கேட்டுக்கொண்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் இதுபோன்ற பொய்யான தகவல்களை கண்டு மதிமயங்கி விட வேண்டும் என்றும் பொது மக்களுக்கு JPN அறிவுறுத்தியுள்ளது.